மலேசியக் கோயில் கலவரத்தில் காயமடைந்த தீயணைப்பாளர் மாண்டார்
மலேசியாவின் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் அருகே நடந்த கலவரத்தில் கடுமையாகக் காயமடைந்த தீயணைப்பாளர் முகமது அதிப் முகமது கசிம் காலமானார். அவருக்கு வயது 24.
மலேசியாவின் ஸ்ரீ மஹா மாரியம்மன் கோயில் அருகே நடந்த கலவரத்தில் கடுமையாகக் காயமடைந்த தீயணைப்பாளர் முகமது அதிப் முகமது கசிம் காலமானார். அவருக்கு வயது 24.
தேசிய இதய நிலையத்தில் அவர் நேற்றிரவு மணி 9.40 அளவில் (டிசம்பர் 17) மாண்டார்.
கெடா மாநிலத்தில் உள்ள அவரின் சொந்த ஊரில் அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.
சென்ற மாதம் 27 ஆம் தேதி, ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயம் அருகே மூண்ட கலவரத்தில், சிலரால் அவர் தாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
வாகனங்களிலிருந்து எரியும் தீயை அணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டிருந்தார்.