மலேசியா:சமூக ஊடகத்தின் மூலம் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்ந்த 249 சந்தேக நபர்கள் கைது
சமூக ஊடகத்தின் மூலம் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்க முயன்ற 249 சந்தேக நபர்களை மலேசியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கோலாலம்பூர்: சமூக ஊடகத்தின் மூலம் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்க முயன்ற 249 சந்தேக நபர்களை மலேசியக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்படவர்களில் மலேசியர்களும் வெளிநாட்டவரும் அடங்குவர்.
Facebook, Twitter, Instagram போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அந்த நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபட்டதாக உள்துறைத் துணை அமைச்சர் மாசிர் குஜாட் தெரிவித்தார்.
அதே நேரத்தில் அரசாங்கம் 3,871 Facebook கணக்குகளைக் கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பயங்கரவாத சித்தாந்தம் இணையத்தில் பரவுவதைத் தடுக்க 800 கணக்குகள் முடக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.