Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: மாதை மின்தூக்கியில் தாக்கிய ஆடவர் கைது

கோலாலம்பூர் MRT நிலைய மின்தூக்கியில் மாது ஒருவரைத் தாக்கிக் கொள்ளையடித்த சந்தேக நபரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

வாசிப்புநேரம் -

கோலாலம்பூர் MRT நிலைய மின்தூக்கியில் மாது ஒருவரைத் தாக்கிக் கொள்ளையடித்த சந்தேக நபரைக் காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

அந்த 26 வயது ஆடவர், சம்பவ தினத்துக்கு முதல் நாள், MRT நிலையத்துக்கு அருகிலிருந்த கடையைக் கொள்ளையடித்ததும் விசாரணையில் தெரியவந்தது.

சம்பவத்தில் தாக்கப்பட்ட மாது, காயமுற்றதுடன், அடையாள அட்டை, வங்கி அட்டைகள், 400 ரிங்கிட் பணம் ஆகியவற்றையும் பறிகொடுத்தார்.

பெண்கள் விழிப்புடன் இருக்கவேண்டும் என்றும், குற்றவாளிகள் மிரட்டும்போது தற்காத்துக்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும் என்றும் மலேசியத் துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் (Wan Azizah Wan Ismail) வலியுறுத்தினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்