Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

'மாண்டபின்' உயிர்பிழைத்த ஆடவர்

பிணவறையின் உறையவைக்கும் பெட்டியில் ஓர் இரவு இருந்த ஆடவர் ஒருவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
'மாண்டபின்' உயிர்பிழைத்த ஆடவர்

(கோப்புப் படம்: Pixabay)

பிணவறையின் உறையவைக்கும் பெட்டியில் ஓர் இரவு இருந்த ஆடவர் ஒருவர் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் இந்தியாவின் புதுடில்லி நகரில் நடந்தது.

போக்குவரத்து விபத்தில் சிக்கிய ஸ்ரீகேஷ் குமார் என்ற ஆடவர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார்.

அவரிடம் உயிருடன் இருப்பதற்கான அறிகுறி ஏதும் தென்படவில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியது.

ஸ்ரீகேஷ் மாண்டதாக மருத்துவர் அறிவித்ததை அடுத்து ஆடவர் பின்னர் அரசாங்க மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

அங்கு பிரேதப் பரிசோதனை நடத்தப்படவிருந்தது.

ஸ்ரீகேஷின் குடும்பத்தாரைத் தொடர்புகொண்ட மருத்துவர்கள், அவரைப் பிணவறையின் உறையவைக்கும் பெட்டியில் வைத்தனர்.

ஆடவர் சுமார் 6 மணி நேரம் அங்கிருந்தார்.

அவரது குடும்பத்தார் மருத்துவமனைக்குச் சென்ற பிறகே உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

ஸ்ரீகேஷ் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார்.

தற்போது நினைவற்ற நிலையில் உள்ள ஆடவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்த விசாரிக்கப்படு்கிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்