Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இந்தியா: சவக்கிடங்கிலிருந்து காப்பாற்றப்பட்ட முதியவர் மாண்டார்

இந்தியாவின் தமிழ்நாட்டில், இறந்துவிட்டார் என்று தவறுதலாக நினைத்து சவக்கிடங்கில் வைக்கப்பட்ட முதியவர், அதிலிருந்து காப்பாற்றப்பட்ட சில நாள்களில் மரணமடைந்தார்.

வாசிப்புநேரம் -

இந்தியாவின் தமிழ்நாட்டில், இறந்துவிட்டார் என்று தவறுதலாக நினைத்து சவக்கிடங்கில் வைக்கப்பட்ட முதியவர், அதிலிருந்து காப்பாற்றப்பட்ட சில நாள்களில் மரணமடைந்தார்.

74 வயதுடைய திரு பாலசுப்ரமணியம், திங்கள்கிழமை மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டபோது அவர் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மறுநாள் வரை சவக்கிடங்கின் குளிர்பெட்டியில் வைக்கப்பட்டதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.

இறுதிச் சடங்கிற்காக அவரின் உடலை எடுத்தபோது, அவர் நடுங்கிக்கொண்டிருந்தது தெரியவந்தது.

வேறொரு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், நேற்று மாண்டார்.

அவர் என்ன பிரச்சினைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்பது குறித்த தகவல்கள் இல்லை.

திரு. பாலசுப்ரமணியம் இறந்ததற்கான மருத்துவச் சான்றிதழும் அவர் குடும்பத்திடம் இல்லை என சேலம் காவல்துறை அதிகாரி கூறினார்.

கவனக்குறைவால் மனித உயிருக்கு ஆபத்து விளைவித்ததாக அந்தக் குடும்பம் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாக BBC தெரிவித்தது. 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்