Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சக்கர நாற்கலியிலிருந்து இறங்கி கால்வாயில் பூனைக்குட்டியை மீட்கும் ஆடவர்

சக்கர நாற்காலியிலிருந்து இறங்கிக் கால்வாயில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பூனைக்குட்டியை மீட்ட மலேசிய ஆடவரின் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

வாசிப்புநேரம் -
சக்கர நாற்கலியிலிருந்து இறங்கி கால்வாயில் பூனைக்குட்டியை மீட்கும் ஆடவர்

(படம்: Abu Fathiyyaturahma Menk AbdunMujtahid/Facebook)

சக்கர நாற்காலியிலிருந்து இறங்கிக் கால்வாயில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த பூனைக்குட்டியை மீட்ட மலேசிய ஆடவரின் காணொளி இணையத்தில் பரவி வருகிறது.

கைகளால் தவழ்ந்து பள்ளம் ஒன்றைக் கடந்து கால்வாயைச் சென்றடைகிறார் ஆடவர். கால்வாயின் விளிம்பில் இருக்கும் குட்டியைத் தரையில் மிக எளிமையாகத் தூக்கிவைப்பது தெரிகிறது. பூனை மீட்கப்பட்டதும் துள்ளி ஓடுகிறது.

காணொளிஆடவரின் நண்பர் Abu Fathiyyaturahma Menk Abdun Mujtahidஇன் Facebook பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. காணொளியைப் பதிவேற்றம் செய்த நண்பர் செயற்கைக் காலைப் பொருத்தியிருப்பதால் பள்ளத்தில் நடக்க இயலாததாகக் கூறினார்.

Facebookஇல் சுமார் 1,400 முறை காணொளி பகிரப்பட்டுள்ளது. ஆடவரின் பரிவுமிக்க செயலைப் பலர் பாராட்டி வருகின்றனர்.
 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்