மணிலா அனைத்துலக விமான நிலையம் கமுரி சூறாவளி காரணமாகத் தற்காலிகமாக மூடப்படும்
கமுரி சூறாவளியால் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அனைத்துலக விமான நிலையம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
கமுரி சூறாவளியால் பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் உள்ள அனைத்துலக விமான நிலையம் நாளை தற்காலிகமாக மூடப்படவுள்ளது.
நாளை முற்பகல் 11 மணியில் இருந்து இரவு 11 மணிவரை விமான நிலையம் மூடப்படலாமென முன்னுரைக்கப்பட்டுள்ளது.
சக்திவாய்ந்த சூறாவளியை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையத்தை மூட முடிவு செய்ததாக அதிகாரிகள் கூறினர்.
சூறாவளியின் விளைவைப் பெறுத்து விமானச் சேவையை மீண்டும் எப்போது தொடங்கலாம் என்பது முடிவெடுக்கப்படும்.
இன்று தென் கிழக்காசிய விளையாட்டுப் போட்டிகளும் சூறாவளியால் பாதிக்கப்பட்டன.