சூறாவளியைப் பொருட்படுத்தாது மணமுடித்த தம்பதியினர்
அந்தச் சூழ்நிலையிலும் அழகிய வெள்ளை திருமண உடையை அணிந்து தமது காதலரை மணமுடித்தார் பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒருவர்.
ஆகாயத்தில் கார்மேகங்கள்.... குழாயைத் திறந்துவிட்டதுபோல் விடாது மழைபெய்ய.. ஊரெங்கும் வெள்ளம்.
அந்தச் சூழ்நிலையிலும் அழகிய வெள்ளை திருமண உடையை அணிந்து தமது காதலரை மணமுடித்தார் பிலிப்பீன்சைச் சேர்ந்த ஒருவர்.
24 வயது ஜோபெல் டெலோஸ் எஞ்செலெஸ், வெள்ளம், மழையைப் பொருட்படுத்தாது தம் இரு பிள்ளைகளின் தந்தையை தேவாலயத்தில் நேற்று திருமணம் செய்துகொண்டார்.
பிலிப்பீன்ஸ் தலைநகரம் மணிலாவையும் அவர்கள் வசிக்கும் புலாகான் (Bulacan) வட்டாரத்தையும் சூறாவளி 'யாகி' தாக்கியுள்ளது.
காதலனை மணமுடிக்க மழையும் வெள்ளமும் தம்மை தடுத்துநிறுத்த முடியாது என்று அவர் கூறினார்.
அவர்களின் திருமணக் காணொளி ஃபேஸ்புக்கை வலம் வருகிறது.