கழுத்து வெட்டப்பட்டு பாலகன் மரணம் - தாய் கைது
மலேசியாவில் கழுத்து வெட்டப்பட்டு பாலகன் மாண்ட சம்பவத்தின் தொடர்பில் அவனது 31 வயதுத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் கழுத்து வெட்டப்பட்டு பாலகன் மாண்ட சம்பவத்தின் தொடர்பில் அவனது 31 வயதுத் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓராண்டு 7 மாதம் நிரம்பிய மகனின் தொண்டையைக் கத்தியால் அவர் வெட்டியதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
அவரது கணவர் கடுமையாகக் காயமடைந்த மகனை அவசரஅவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோதும் அங்கு சென்றடைவதற்கு முன் அச்சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது.
பஹாங் மாநிலத்தின் மாரான் நகரில் சம்பவம் நிகழ்ந்தது.
மாண்ட சிறுவன், மூன்று பிள்ளைகளில் ஆக இளையவன் என்று தெரிவிக்கப்பட்டது.
தனது மனைவிக்கு மருத்துவப் பிரச்சினை இருந்ததாகவும் ஆனால் அதற்கு அவர் சிகிச்சை நாடவில்லை என்றும் கணவர் தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டார்.