மலேசியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் புதிதாக 660 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி
மலேசியாவில் நேற்றுப் புதிதாக 660 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நால்வர் மாண்டனர்.
மலேசியாவில் நேற்றுப் புதிதாக 660 பேருக்குக் கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நால்வர் மாண்டனர்.
தொடர்ந்து இரண்டாவது நாளாக 660 பேருக்குக் கிருமி தொற்றியது அடையாளம்காணப்பட்டது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் அதிகமானோர் Sabah மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அவர்களையும் சேர்த்து மலேசியாவில் நோய்த்தொற்று உறுதியானோர் மொத்த எண்ணிக்கை 17ஆயிரத்து-540. அவர்களில் 167 பேர் மாண்டுவிட்டனர்.
புதிதாக பாதிக்கப்பட்டோரில் 6 பேர் வெளிநாட்டிலிருந்து மலேசியா சென்றவர்கள்; எஞ்சிய அனைவருக்கும் உள்ளூரிலேயே கிருமி தொற்றியது.
நேற்று 233 பேர் நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வசிப்பிடம் திரும்பியதாக மலேசியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.