மும்பை மருத்துவமனையில் தீ - 6 பேர் பலி, 100க்கும் அதிகமானோர் காயம்
மும்பையில் உள்ள மருத்துவமனை தீப்பற்றிக் கொண்டதில் குறைந்தது 6 பேர் மாண்டனர்.
மும்பையில் உள்ள மருத்துவமனை தீப்பற்றிக் கொண்டதில் குறைந்தது 6 பேர் மாண்டனர்.
100க்கும் அதிகமானோர் காயமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவில் தீப் பாதுகாப்பு குறித்து அலட்சியப் போக்கு நிலவுவதை அண்மைச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டியுள்ளது
அரசாங்கம் நடத்தும் ESIC காம்கார் மருத்துவமனையின் 4ஆவது தளத்தில், நேற்று மாலை தீ மூண்டது.
சுமார் 150 பேர் மீட்கப்பட்டனர். நோயாளிகள், மருத்துவர்கள், தாதியர் ஆகியோர் அவர்களில் அடங்குவர்.
பல்வேறு தளங்களில் சிக்கியுள்ளோரைத் தீயணையாளர்கள் ஏணியைப் பயன்படுத்தி மீட்டதாக Press Trust of India செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மீட்கப்பட்டவர்கள் வேறொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அந்தேரி என்னும் புறநகர்ப் பகுதியிலுள்ள அந்த மருத்துவமனையில் தீப் பற்றியதற்கான காரணம் தெரியவில்லை.