கிருமித்தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்த மியன்மாரின் 100 வயது மாது
மியன்மாரில் 100 வயது மாது ஒருவர், COVID-19 கிருமித்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார்.
மியன்மாரில் 100 வயது மாது ஒருவர், COVID-19 கிருமித்தொற்றில் இருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளார்.
அவருக்கும் அவரது வீட்டில் வசிக்கும் 9 பேருக்கும் கிருமித்தொற்று ஏற்பட்டதாகக் கடந்த மாதம் உறுதிப்படுத்தப்பட்டது.
அந்த முதியவரின் பேரனுக்கு வேலையிடத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, வீட்டில் இருப்பவர்களுக்கு அது பரவியது.
கிருமித்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அந்த முதியவர், 2 வாரங்களுக்குத் தமது குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டார்.
கிருமித்தொற்று ஏற்பட்டிருந்தபோதும் அதற்கான அறிகுறிகள் எதுவும் அவரிடத்தில் தென்படவில்லை.
கிருமித்தொற்று இல்லை என்பது இரு முறை உறுதிசெய்யப்பட்ட பிறகே, குடும்ப உறுப்பினர்கள் வீடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டது.