மியன்மார் ராணுவம் 2.8 பில்லியன் வெள்ளி் மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு அங்கீகாரம்
மியன்மார் ராணுவம் 2.8 பில்லியன் வெள்ளி் மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு அங்கீகாரம்
மியன்மார் ராணுவம் சுமார் 2.8 பில்லியன் வெள்ளி் மதிப்பிலான புதிய முதலீடுகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
நாட்டின் முதலீட்டு ஆணையம் 15 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
2.5 பில்லியன் வெள்ளி மதிப்பிலான திரவ இயற்கை எரிவாயு மின் ஆலை, ஒப்புதல் பெற்ற திட்டங்களில் ஆகப் பெரியது.
2030ஆம் ஆண்டிற்குள் தேசியக் கட்டமைப்பிலிருந்து
100 விழுக்காடு மின்சாரத்தைச் சொந்தமாக உற்பத்தி செய்ய மியன்மார் திட்டமிடுகிறது.
பிப்ரவரியில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பிற்குப் பிறகு ஒப்புதல் பெற்றிருக்கும் ஆகப்பெரிய முதலீட்டுத் திட்டம் அது.
மற்ற திட்டங்கள் மியன்மாரின் கால்நடை, உற்பத்தி, சேவை ஆகிய துறைகளைச் சேர்ந்தவை.
ஆனால் திட்டங்களை முன்வைத்த நிறுவனங்கள் அல்லது நாடுகள் பற்றி எந்த விவரமும் வெளியிடப்படவில்லை.