Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மியன்மார் அரசாங்க ஒளிவழியின் பக்கங்களை முடக்கிய Facebook

மியன்மார் அரசாங்க ஒளிவழியின் பக்கங்களை Facebook நிறுவனம் முடக்கியுள்ளது.

வாசிப்புநேரம் -
மியன்மார் அரசாங்க ஒளிவழியின் பக்கங்களை முடக்கிய Facebook

(கோப்புப் படம்: REUTERS/Regis Duvignau/Illustration/File Photo)

மியன்மார் அரசாங்க ஒளிவழியின் பக்கங்களை Facebook நிறுவனம் முடக்கியுள்ளது.

அதனால் MRTV, MRTV Live பக்கங்கள் செயல்பட முடியாது.

ராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயிருக்கே ஆபத்து நேரலாம் என்றும் நேற்று அந்தப் பக்கங்களில் பதிவிடப்பட்டிருந்தன.

அதைத்தொடர்ந்து இன்று Facebook நிறுவனம், ஒளிவழியின் அந்தப் பக்கங்களை முடக்கியுள்ளது.

MRTV, MRTV Live பக்கங்கள் பலமுறை விதிகளை மீறிச் செயல்பட்டதாக Facebook தெரிவித்தது.

சமூகத்தில் வன்முறையைத் தூண்டி, அமைதியைக் குலைக்கும் விதமாகவும், உயிருக்கு மிரட்டல்கள் விடுக்கும் வகையிலும் பதிவிட்டதால் ஒளிவழியின் பக்கங்கள் முடக்கப்படுவதாக Facebook தெரிவித்துள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்