மியன்மாரில் சிவப்பு நிறச் சாயத்தைச் சாலைகளில் ஊற்றிப் போராடும் மக்கள்
மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்துவருகின்றன.
மியன்மாரில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்துவருகின்றன.
ராணுவ அதிகாரிகளை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சிவப்பு நிறச் சாயத்தைச் சாலைகளில் ஊற்றி வருகின்றனர்.
யங்கூனில் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்ட பகுதிகளில், சாயம் நிறைந்த பைகளை அவர்கள் வீசி எரிந்தனர்.
சிவப்பு நிறச் சாயம், ரத்தத்தைக் குறிப்பதாக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பாக, பூக்கள், மெழுகுவர்த்திகள், முட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை மியன்மாரில் 560க்கும் மேற்பட்டோர் கலவரங்களில் மாண்டுவிட்டனர்.