மலேசியா: காவல்துறை வாகனத்தைச் சோதனையிட்ட ஆடவர்கள் இருவர் கைது
மலேசியாவின் ராந்துவா பகுதியில் காவல்துறை வாகனத்தைச் சோதனையிட்ட சந்தேகத்தின்பேரில் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மலேசியாவின் ராந்துவா பகுதியில் காவல்துறை வாகனத்தைச் சோதனையிட்ட சந்தேகத்தின்பேரில் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராந்துவாவில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது.
அதனையொட்டிப் பாதுகாப்புப் பணிகளுக்காகச் சுற்றுக் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனத்தை மறித்து, சில ஆடவர்கள் தகாதமுறையில் சோதனையிட்டதாகக் கூறப்படுகிறது.
"தேசிய முன்னணிக்கு ஆதரவாக, வாக்குப் பதிவில் மோசடி செய்ய வந்தவர்கள்" என்று எண்ணி வாகனத்தைச் சோதனையிட்டதாக ஆடவர்கள் கூறினர்.
அதைத் தொடர்ந்து இன்று இரண்டு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்னும் மூன்று பேரைத் தேடி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவர்கள் பக்கட்டான் ஹரப்பான் கூட்டணியைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
சம்பவத்தின் காணொளி சமூகவலைத் தளங்களில் வேகமாகப் பரவியது.