பண மோசடி வழக்குக்கு முந்திய விசாரணைக்காக நீதிமன்றம் சென்றுள்ளார் நஜிப்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பண மோசடி வழக்குக்கு முந்திய விசாரணைக்காக இன்று (ஆகஸ்ட் 10) நீதிமன்றம் சென்றுள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், பண மோசடி வழக்குக்கு முந்திய விசாரணைக்காக இன்று (ஆகஸ்ட் 10) நீதிமன்றம் சென்றுள்ளார்.
நேற்று முன்தினம், திரு. நஜிப் மீது பண மோசடி தொடர்பில் 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
1MDB நிதி மோசடியுடன் தொடர்புடைய குற்றச்சாட்டுகள் அவை.
1MDBயின் முன்னைய கிளை நிறுவனமான SRC Internationalஇல் இருந்து, சுமார் 10 மில்லியன் டாலர் தொகை, திரு. நஜிப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
திரு. நஜிப் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துவருகிறார்.
வழக்கு விசாரணைக்கான தேதிகளையும், அந்த வழக்குடன் தொடர்புடைய தகவல்களை வெளியிடுவதற்கான தடை குறித்தும் நீதிமன்றம் இன்று முடிவுசெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அத்தகைய தடைக்குத் திரு. நஜிப்பின் வழக்குரைஞர் முகமது ஷஃபி அப்தூலா (Muhammad Shafee Abdullah) கோரிக்கை விடுத்துள்ளார்.
வெறுப்பைத் தூண்டும் கருத்துகள் ஊடகங்களிலும், பொதுமக்களிடையேயும் பரவுவதைத் தடுப்பது அதன் நோக்கம்.