மலேசியா: முன்னாள் பிரதமர் நஜிப் மீது மேலும் 3 பண மோசடிக் குற்றச்சாட்டுகள்
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது பண மோசடியின் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது பண மோசடியின் தொடர்பில் மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மோசடி செய்யப்பட்ட பணத்தின் மதிப்பு சுமார் 11.5 மில்லியன் வெள்ளி.
1MDB முதலீட்டு நிறுவன நிதி மோசடியின் தொடர்பில் திரு. நஜிப் ரசாக் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆக அண்மைக் குற்றச்சாட்டு இது.
AmPrivate வங்கியில் திரு. நஜிப்பிற்கு உள்ள மூன்று கணக்குகள் மூலம் அவர், கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், திரு. நஜிப் இன்று நீதிமன்றத்தில் அந்த குற்றச்சாட்டுகளைத் மறுத்தார்.