மலேசிய தேர்தல் முடிவுகள் வெளியான இரவு முன்னாள் பிரதமர் நஜிப் இருமுறை அழைத்தார் - அன்வார் இப்ராஹிம்
கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேர்தல் முடிவுகள் வெளியான இரவு, மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தம்மை இருமுறை தொலைபேசியில் அழைத்ததாகக் கூறியுள்ளார்.
கெஅடிலான் கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம், தேர்தல் முடிவுகள் வெளியான இரவு, மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், தம்மை இருமுறை தொலைபேசியில் அழைத்ததாகக் கூறியுள்ளார்.
மலேசியாவின் 14ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி 60 ஆண்டில் முதன்முறையாகத் தோல்வியுற்றது.
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியுற்றிருந்த திரு. நஜிப்பிடம், நடந்ததை ஏற்றுக்கொண்டு இனி நடக்கவேண்டியவற்றில் கவனம் செலுத்துமாறு தாம் கூறியதாகத் திரு.அன்வார் குறிப்பிட்டார்.
நட்பு முறையில் தாம் அவருக்கு அந்த ஆலோசனையைக் கூறியதாக அவர் தெரிவித்தார்.