'விலையுயர்ந்த பைகள், ரொக்கம், நகைகள்': விளக்கமளிக்கும் நஜிப்
1MDB நிதிக் கணக்கிலிருந்து தமது சொந்த வங்கிக் கணக்கிற்கு மில்லியன் கணக்கான டாலர் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதைத் தாம் அறிந்திருக்கவில்லை என்று மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருக்கிறார்.
1MDB நிதிக் கணக்கிலிருந்து தமது சொந்த வங்கிக் கணக்கிற்கு மில்லியன் கணக்கான டாலர் மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதைத் தாம் அறிந்திருக்கவில்லை என்று மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கூறியிருக்கிறார்.
அதே வேளையில் தம்மிடம் ஏன் விலையுயர்ந்த பைகள்,ரொக்கம், நகைககள் ஆகியவை இருந்தன என்பது குறித்தும் அவர் விளக்கமளித்தார். அவை மலேசிய அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டன.
பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் தமது மனைவிக்கும் மகளுக்கும் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்றார் திரு நஜிப். அதற்கும் 1MDB விவகாரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றார் அவர்.
திரு நஜிப்பின் மகள், கஸக்ஸ்த்தான் அதிபரின் அக்காள் மகனைத் திருமணம் செய்திருக்கிறார். தமது மருமகன், தம் மனைவி ரோஸ்மாவுக்குப் பல பொருட்களை அன்பளிப்பாக வழங்கியதாகத் தெரிவித்தார் திரு நஜிப்.
மேலும் தம் வீட்டில் இருந்த ரொக்கம் அனைத்தும், கட்சி நிதி என்று அவர் கூறியிருக்கிறார்.
நகைகளும் தமது மனைவிக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டவை என்று கூறிய திரு நஜிப் அவற்றை, தமது மனைவி பயன்படுத்தவில்லை என்றும் சொன்னார்.