Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு விசாரணை

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இந்த வாரம் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகிறார்.

வாசிப்புநேரம் -
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு விசாரணை

(படம்: AFP/MOHD RASFAN)

மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் இந்த வாரம் வழக்கு விசாரணையை எதிர்நோக்குகிறார்.

அரசாங்க நிதியான 1MDB தொடர்பான ஊழலில் திரு. நஜிப் பில்லியன் கணக்கான டாலரைத் திருடியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

அவருடைய கூட்டணிக் கட்சி ஆட்சியை இழப்பதற்கு 1MDB விவகாரம் ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது.

வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கும்.

பண மோசடி செய்ததாகவும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகவும் திரு நஜிப் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகளைத் திரு. நஜிப் மறுக்கிறார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்