Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

உலகின் ஆக உயரமான இரண்டாவது மலையை பனிக்காலத்தின்போது வெற்றிகரமாக ஏறிய நேப்பாளக் குழு

நேப்பாளத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழு, புதிய மலையேறும் சாதனையைப் படைத்துள்ளது.

வாசிப்புநேரம் -
உலகின் ஆக உயரமான இரண்டாவது மலையை பனிக்காலத்தின்போது வெற்றிகரமாக ஏறிய நேப்பாளக் குழு

(கோப்புப் படம்: AMELIE HERENSTEIN / AFP)

நேப்பாளத்தைச் சேர்ந்த 10 பேர் அடங்கிய குழு, புதிய மலையேறும் சாதனையைப் படைத்துள்ளது.

உலகின் ஆக உயரமான இரண்டாவது மலையான K2-வை, பனிக்காலத்தின்போது வெற்றிகரமாக ஏறிய பெருமை அவர்களைச் சேரும்.

பாகிஸ்தானிய எல்லையில் அமைந்துள்ள 8,600 மீட்டர் உயரம் கொண்ட K2-மலை, இமயமலைத் தொடரில் மிகப் பிரபலமானது.

அங்கு மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

வெப்பநிலை, உறைநிலைக்குக்-கீழ் 60 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாகப் பதிவாகலாம்.

மலையேற்றத்தை முடித்துவிட்டு, மலையடிவாரத்தில் உள்ள முகாமுக்குக் குழுவினர் திரும்பும்போது, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் கீழே விழுந்து மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்