நேப்பாளம் : கனத்த மழையால் குறைந்தது 50 பேர் பலி
நேப்பாளத்தில் பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் குறைந்தது 50 பேர் மாண்டனர்.
நேப்பாளத்தில் பெய்த கனத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு ஆகியவற்றில் குறைந்தது 50 பேர் மாண்டனர்.
அவர்களில் பெரும்பாலோர் இமயமலைப் பகுதியில் இந்தியாவுடனான எல்லையில் மாண்டதாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
மேலும் 33 பேரைக் காணவில்லை; அவர்கள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது நிலச்சரிவுகளில் புதையுண்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
பல பகுதிகளில் சாலைகளும், நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
தொலைத் தொடர்புக் கோபுரங்கள் இடிந்துவிழுந்ததாய்க் கூறப்பட்டது.