Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நேப்பாள நாடாளுமன்ற முன்னாள் நாயகர் பலாத்காரக் குற்றச்சாட்டில் கைது

நேப்பாளத்தின் நாடாளுமன்ற முன்னாள் நாயகர் பலாத்காரக் குற்றச்சாட்டின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாசிப்புநேரம் -
நேப்பாள நாடாளுமன்ற முன்னாள் நாயகர் பலாத்காரக் குற்றச்சாட்டில் கைது

(படம்: AFP/Etienne Oliveau)

நேப்பாளத்தின் நாடாளுமன்ற முன்னாள் நாயகர் பலாத்காரக் குற்றச்சாட்டின் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெண் ஊழியர் ஒருவர் அவர்மீது குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த கைதாணையைத் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற நாயகரான கிருஷ்ண பகதூர் மஹாரா கைது செய்யப்பட்டார்.

மஹாரா ஆளும் நேப்பாளக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர். மாவோ கிளர்ச்சிக் குழுவிலும் இருந்தவர். நேப்பாளத் துணைப் பிரதமர் பொறுப்பையும், பல்வேறு முக்கியப் பொறுப்புகளையும் ஏற்கனவே வகித்தவர்.

அவர் தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார். இருப்பினும் சென்ற வாரம் அந்தப் பெண் ஊடகங்களிடம் பலாத்காரம் குறித்துத் தெரிவித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற நாயகர் பொறுப்பிலிருந்து மஹாரா விலகினார்.

சம்பவத்தின் தொடர்பில் நடவடிக்கை எடுக்கக்கோரி நேப்பாள ஆளுங்கட்சிக்குக் கடும் நெருக்குதல் அளிக்கப்பட்டுவருகிறது.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்