நேப்பாளம்: மலையிலிருந்து பேருந்து விழுந்ததில் 11 பேர் மரணம்;108 பேர் காயம்
நேப்பாளத்தின் மத்திய பகுதியில் உள்ள மலையிலிருந்து, அளவுக்கதிகமானோரை ஏற்றிச்சென்ற பேருந்து விழுந்ததில் 11 பேர் மாண்டனர்;108 பேர் காயமடைந்தனர்.
நேப்பாளத்தின் மத்திய பகுதியில் உள்ள மலையிலிருந்து, அளவுக்கதிகமானோரை ஏற்றிச்சென்ற பேருந்து விழுந்ததில் 11 பேர் மாண்டனர்;108 பேர் காயமடைந்தனர்.
சிந்துபற்சுவாக்கிலிருந்து (Sindhupalchowk) தலைநகர் காத்மண்டுக்கு அந்தப் பேருந்து சென்றுகொண்டிருந்தது.
ஒரு வளைவில் சுமார் 50 மீட்டர் ஆழத்தில் பேருந்து விழுந்தது.
சம்பவ இடத்தில் 6 பேர் மாண்டனர்; மற்றவர்கள் மருத்துவமனை செல்லும் வழியிலோ சிகிச்சை பலனின்றியோ மாண்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது.