இணையத்தில் வதந்தியைப் பரப்பியவருக்கு சிறைத் தண்டனை
தென் கொரிய பாப் பாடகி சன்னியைப் பற்றி இணையத்தில் வதந்தியைப் பரப்பியவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தென் கொரிய பாப் பாடகி சன்னியைப் பற்றி இணையத்தில் வதந்தியைப் பரப்பியவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாடகி பிரபல நடிகர் ஒருவருடன் கள்ளத்தனமாக உறவு வைத்துள்ளதாக இணையவாசி ஒருவர் கடந்த ஆண்டு வதந்தியைப் பரப்பியிருந்தார்.
அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையின் முடிவில், மில்லியன் கணக்கான பயனீட்டாளர்களை கொண்ட சமூகவலைத்தளங்களில் பிரபலமான ஒருவர் மீது வதந்தியைப் பரப்புவது தவறான செயல் என்று நீதிபதி கூறினார்.
அவருக்கு 80 மணி நேரம் சமூகசேவை செய்வதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வதந்தியைப் பரப்புவர்கள் மீது தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் நீதிபதி எச்சரித்தார்.