Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

சிங்கப்பூரிலிருந்து ஜொகூருக்குச் செல்லும் வாகன ஓட்டுநர்களுக்கு Touch n Go அட்டைகளில் பணம் நிரப்பும் சேவை இனி இல்லை

சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாலம் வழியாக ஜொகூர் பாருவுக்குச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் இனி சோதனைச் சாவடியில் இனி தங்களது Touch n Go அட்டைகளில் பணம் நிரப்பமுடியாது. 

வாசிப்புநேரம் -

சிங்கப்பூரிலிருந்து ஜொகூர் பாலம் வழியாக ஜொகூர் பாருவுக்குச் செல்லும் வாகன ஓட்டுநர்கள் இனி சோதனைச் சாவடியில் தங்களது Touch n Go அட்டைகளில் பணம் நிரப்பமுடியாது.

சுல்தான் இஸ்கந்தர் கட்டடத்தில் உட்லண்ட்ஸில் இருந்து செல்லும் வாகனங்களுக்கான சேவை முகப்புகளில் Touch n Go அட்டைகளில் பணம் நிரப்பும் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் உறுதிப்படுத்தியுள்ளது.

சோதனைச் சாவடியில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதே அதன் நோக்கம் என்று மாநிலப் பொதுப்பணி, உள்கட்டமைப்பு, பேக்குவரத்துக் குழுத் தலைவர் மஸ்லான் புஜாங், சேனல் நியூஸ்ஏஷியாவிடம் தெரிவித்தார்.

இருப்பினும், ஜொகூர் பாருவிலிருந்து சிங்கப்பூர் திரும்பும் போது, ஓட்டுநர்கள் தங்களது Touch n Go அட்டைகளில் பணத்தை நிரப்பிக்கொள்ளலாம்.


 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்