தோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா கலந்துகொள்ளாது
வட கொரியா தோக்கியோவில் நடைபெறவுள்ள 32ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
வட கொரியா தோக்கியோவில் நடைபெறவுள்ள 32ஆவது ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
இதற்குமுன் 1988ஆம் ஆண்டு தென்கொரியாவில் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கெடுக்கவில்லை.
வடகொரியாவின் விளையாட்டு வீரர்களைக் கிருமித்தொற்றிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் அந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நாட்டின் விளையாட்டுகளுக்கான அமைச்சு குறிப்பிட்டது.
நிபுணத்துவமிக்க விளையாட்டுகளுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவது, உலகளாவிய போட்டிகளில் பதக்கங்களை வெல்வது, அடுத்த ஐந்தாண்டுகளில் பொது விளையாட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பது ஆகியவை பற்றியும் கலந்துரையாடியதாக அமைச்சு சொன்னது.