மலேசியாவில் மாண்ட அயர்லந்து இளையரின் இறுதிச் சடங்கு
மலேசியாவில் மாண்ட அயர்லந்து இளையரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை அயர்லந்தில் இடம்பெறும்.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
மலேசியாவில் மாண்ட அயர்லந்து இளையரின் இறுதிச் சடங்கு செவ்வாய்க்கிழமை அயர்லந்தில் இடம்பெறும்.
15 வயது நோரா ஆன் குவோரினும் (Nora Anne Quoirin) அவருடைய குடும்பத்தினரும் ஆகஸ்ட் 3 ஆம் தேதி நெகிரி செம்பிலானிலுள்ள விடுதிக்குச் சுற்றுலா சென்றிருந்தனர்.
மறுநாள் காணமற்போனதாக புகார் செய்யப்பட்ட இளையரின் சடலம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி விடுதியிலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இளையரின் இறுதிச் சடங்கு பெல்ஃபாஸ்ட் (Belfast) நகரிலிருக்கும் செயிண்ட் பிரிஜிட் தேவாலயத்தில் (St Brigid’s Church) மதியம் ஒரு மணிக்கு இடம்பெறும்.