Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

வடகொரியாவில் ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கம்கொண்ட நிகழ்ச்சி

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், ஆளும் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டதை நினைவுகூரும் வருடாந்தர நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

வாசிப்புநேரம் -

வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன், ஆளும் தொழிலாளர் கட்சி நிறுவப்பட்டதை நினைவுகூரும் வருடாந்தர நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

பியோங்யாங் அத்தகைய ஆண்டுவிழாக்களைப் பெரிய அளவில் கொண்டாடுவது வழக்கம்.

ஆனால் இம்முறை பிரமாண்டமான ஏற்பாடுகள் ஏதும் இல்லை.

திரு. கிம், காலஞ்சென்ற தமது தாத்தா கிம் இல்-சுங், தந்தை கிம் ஜோங்-இல் இருவரின் நினைவிடம் அமைந்திருக்கும் கிம்சுசான் (Kumsusan) அரண்மனைக்கு நேற்று சென்றிருந்தார்.

அவ்விருவரின் நல்லுடல்கள் அங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளன.

வடகொரியாவின் அதிகாரபூர்வ நாளேடான Rodong Sinmun, திரு. கிம் ஜோங் உன்னின் தலைமையில் அணிதிரண்டு தற்சார்புப் பொருளியலை உருவாக்கும்படி பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

சென்ற வாரம் சுவீடனில் அமெரிக்காவுடன் நடத்திய அணுவாயுதக் களைவு தொடர்பான பேச்சு முறிந்ததைத் தொடர்ந்து, வடகொரியாவில் ஒற்றுமையை வலுப்படுத்துவது நாளேட்டின் நோக்கம் என்று கருதப்படுகிறது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்