ஜப்பான்: புகார் கொடுக்க 24,000 தொலைபேசி அழைப்புகளைச் செய்த முதியவர் கைது
தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் புகார் கொடுக்க 24,000 முறை அழைத்த ஜப்பானிய முதியவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
தொலைத்தொடர்பு நிறுவனத்திடம் புகார் கொடுக்க 24,000 முறை அழைத்த ஜப்பானிய முதியவரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
எட்டு நாள் காலக்கட்டத்தில், வாடிக்கையாளர் சேவை எண்ணை அவர் நூற்றுக்கணக்கான முறை அழைத்தார்.
நிறுவனத்தின்மீதான அதிருப்தியை வெளிப்படுத்துவதற்கு அந்த அழைப்புகளை அவர் செய்தார்.
நிறுவனத்தின் வேலைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டார் 71 வயது அகிடோஷி ஒகாமோட்டோ (Akitoshi Okamoto).
ஜப்பானின் மக்கள்தொகை மூப்படைவதால் இத்தகைய சமூகப் பிரச்சினைகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.