Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தான்: மோசமான தாக்குதல்-128 பேர் பலி

பாக்கிஸ்தானில் அரசியல் பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 128 பேர் மாண்டனர்; குறைந்தது150 பேர் காயமடைந்தனர்.

வாசிப்புநேரம் -
பாகிஸ்தான்: மோசமான தாக்குதல்-128 பேர் பலி

( படம்; AFP/Banaras Khan )

பாக்கிஸ்தானில் அரசியல் பேரணியில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 128 பேர் மாண்டனர்; குறைந்தது150 பேர் காயமடைந்தனர்.

பாக்கிஸ்தானின் தென்மேற்கு வட்டாரத்தில் அமைந்துள்ள குவெட்டாவில் சம்பவம் நேற்று இரவு நடந்தது.

காயமடைத்தோர் இழுவண்டிகளிலும், மோட்டார் சைக்கிள்களிலும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

பாக்கிஸ்தான் வரலாற்றில் நடத்த ஆக மோசமான தாக்குதல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது.

மக்களிடையே பாதுகாப்பு குறித்த நம்பிக்கையை சம்பவம் குலைத்துவிட்டதாகாக் கூறப்படுகிறது.

பாக்கிஸ்தானில் இம்மாதம் 25ஆம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்த காலகட்டத்தில் அதிகமான வன்முறைச் சம்பவங்கள் நடக்க வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது.

தேர்தல் சமயத்தில் 370,000 பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்