பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமான விபத்து - விமானத்தில் 100க்கும் அதிகமானோர் இருந்தனர்
பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமான விபத்து - விமானத்தில் 100க்கும் அதிகமானோர் இருந்தனர்
பாகிஸ்தானின் Pakistan International Airlines விமானம் கராச்சி நகரில் விபத்துக்குள்ளானது.
லாகூரிலிருந்து கராச்சியின் ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னர், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டது.
விமானத்தில் 99 பயணிகளும் 8 விமானச் சிப்பந்திகளும் இருந்ததாகத் தகவல்கள் கூறின.
விபத்து தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் பலர் மாண்டதாக அஞ்சப்படுகிறது.
பாகிஸ்தானில் COVID-19 காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட விமானச் சேவைகள் சில நாள்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கப்பட்டன.