Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமான விபத்து - விமானத்தில் 100க்கும் அதிகமானோர் இருந்தனர்

பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமான விபத்து - விமானத்தில் 100க்கும் அதிகமானோர் இருந்தனர்

வாசிப்புநேரம் -
பாகிஸ்தானின் கராச்சி நகரில் விமான விபத்து - விமானத்தில் 100க்கும் அதிகமானோர் இருந்தனர்

படம்: AFP/Asif Hassan

பாகிஸ்தானின் Pakistan International Airlines விமானம் கராச்சி நகரில் விபத்துக்குள்ளானது.

லாகூரிலிருந்து கராச்சியின் ஜின்னா அனைத்துலக விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் தரையிறங்குவதற்கு முன்னர், குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியதாகக் கூறப்பட்டது.

விமானத்தில் 99 பயணிகளும் 8 விமானச் சிப்பந்திகளும் இருந்ததாகத் தகவல்கள் கூறின.

விபத்து தொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் பலர் மாண்டதாக அஞ்சப்படுகிறது.

பாகிஸ்தானில் COVID-19 காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட விமானச் சேவைகள் சில நாள்களுக்கு முன்புதான் மீண்டும் தொடங்கப்பட்டன.

  

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்