போதை மாத்திரைகளுடன் பிடிப்பட்ட பங்களாதேஷ் பெண் கிரிக்கெட் ஆட்டக்காரர்
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த ஆட்டக்காரர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் பிடிபட்டார்.
பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணியின் சிறந்த ஆட்டக்காரர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் பிடிபட்டார்.
நஸ்ரின் கான் முக்தா (Nazreen Khan Mukta) என்ற அவர், ஆட்டம் முடித்து பேருந்தில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறையினர் அந்தப் பேருந்தில் நடத்திய திடீர் சோதனையில் அவர் பிடிப்பட்டார்.
'கஃபீன்' கலந்த 14,000 மெத்தஃபெத்தமைன் போதை மாத்திரைகள் நஸ்ரினிடம் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
போதைப் பொருள் கடத்தல் குற்றத்திற்காக நஸ்ரினுக்கு அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.