பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஈக்கள் நிரம்பியுள்ளன.
கடந்த சில வாரங்களாக, நகரில் கனத்த மழை பெய்து வருகிறது.
தகுந்த வடிகால் முறை இல்லாத நிலையில், ஏற்கனவே குப்பை நிரம்பிய வடிகால்களில் மழைநீர் தேங்கிவிடுகிறது. அதனால் வடிகால்களிலிருந்து மேலே வரும் கழிவு சாலைகளில் வெள்ளமாகச் செல்கிறது.
"இவ்வளவு ஈக்களை என் வாழ்க்கையில் பார்த்ததில்லை. சந்தையில் விற்கப்படும் உணவுப் பொருள்களைப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு, ஈக்கள் அவற்றின் மீது மொய்க்கின்றன"
என்று நகரில் வசிப்பவர் ஒருவர் கூறினார்.
இதனால், மக்கள் நோயாக்கு ஆளாகும் வாய்ப்புகள் அதிகம் என்று சுகாதார நிபுணர்கள் அஞ்சுகின்றனர்.