பாகிஸ்தான் ரயில் விபத்து - பலி எண்ணிக்கை 23ஆக அதிகரிப்பு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 23 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 23 பேர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் 73 பேர் காயமடைந்ததாகவும், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
நேற்று லாகூரிலிருந்து வந்துகொண்டிருந்த சரக்கு ரயில், பயணிகள் ரயிலுடன் மோதியது.
விபத்தில் சிக்கிய அனைவரும் மீட்கப்பட்டுவிட்டதாகவும், தற்போது தண்டவாளங்களைச் சரிசெய்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.
விபத்து குறித்து விசாரணை நடைபெறுகிறது.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ரயில்களின் உள்கட்டமைப்புகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்படி ரயில்வே அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளார்.