பாகிஸ்தான்: நெடுஞ்சாலையில் வேன் தீப்பற்றிக்கொண்டதில் 13 பேர் மரணம்
பாகிஸ்தானின் கராச்சி (Karachi) நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் வேன் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில், 13 பேர் மாண்டனர்.
பாகிஸ்தானின் கராச்சி (Karachi) நகரை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் வேன் ஒன்று தீப்பற்றிக்கொண்டதில், 13 பேர் மாண்டனர்.
ஒரு குழந்தை உட்பட, ஐவர் காப்பாற்றப்பட்டனர்.
சம்பவம் நேற்றிரவு நடந்தது.
நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த மற்றொரு வாகனத்தில் இருந்த பொருள், வேனை இடித்ததாகவும் அது பள்ளத்தில் விழுந்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
அப்போது, வேனிலிருந்து எரிபொருள் கசிந்ததில், வாகனத்தில் தீ மூண்டது.
மாண்டோரில், 3 பிள்ளைகளும் அடங்குவர்.
அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சடலங்களை அடையாளம் காண, மரபணுச் சோதனை நடத்தத் தேவைப்படும் என்று கூறப்பட்டது.