தமிழ்நாட்டில் 'Selfie' மரணம்: குடும்ப உறுப்பினர்கள் நால்வர் பலி
இந்தியா: 'Selfie' படம் எடுக்கும்போது தமிழ்நாட்டிலுள்ள அணையில் விழுந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர்.
இந்தியா: 'Selfie' படம் எடுக்கும்போது தமிழ்நாட்டிலுள்ள அணையில் விழுந்து ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் மாண்டனர்.
சமீபத்தில் மணமுடித்த 20 வயதுப் பெண்ணும் அவருடைய குடும்பத்தினரும் பம்பார் அணையில் வழுக்கி விழுந்ததாகத் தமிழ்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது.
CNN தகவல்படி பெண்ணின் கணவரும் அவருடைய தங்கையும் உயிர்பிழைத்தனர்.
அணையில் படம் எடுத்துக்கொண்டிருந்தபோது நீர்மட்டம் உயர்ந்ததாகப் பெண்ணின் கணவர் CNNஇடம் தெரிவித்திருக்கிறார்.
அணையில் விழுந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அக்டோபர் 2011இலிருந்து நவம்பர் 2017வரை 'selfie' படங்கள் எடுக்கும்போது உலக அளவில் 259 பேர் மாண்டதாக ஓர் ஆய்வு தெரிவித்துள்ளது.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் இந்தியாவைச் சேர்ந்தோர்.
இதனால் அபாயம் விளைவிக்கக்கூடிய இடங்களில் 'selfie' எடுப்பதைத் தடைசெய்யத் தொடங்கியுள்ளனர் அதிகாரிகள்.