தால் எரிமலை தொடர்ந்து சில வாரங்களுக்கு எரிமலைக் குழம்பையும் சாம்பலையும் கக்கக்கூடும் (படங்கள்)
தால் (Taal) எரிமலை தொடர்ந்து சில வாரங்களுக்கு எரிமலைக் குழம்பையும் சாம்பலையும் கக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பிலிப்பீன்ஸ்: தால் (Taal) எரிமலை தொடர்ந்து சில வாரங்களுக்கு எரிமலைக் குழம்பையும் சாம்பலையும் கக்கக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எரிமலை, எந்நேரத்திலும் வெடிக்கும் அபாயம் இருப்பதால் இதுவரை சுமார் 30,000 பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற நேர்ந்துள்ளது.
நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ள அவர்கள் வீடுகளை மட்டுமின்றி உடைமைகள், வேளாண் பயிர்கள், ஆடு, மாடு, கோழி முதலியவற்றையும் விட்டுச்சென்றுள்ளனர்.
பிலிப்பீன்ஸ் செஞ்சிலுவைச் சங்கம் மோசமான சூழ்நிலைக்கு ஆயத்தமாகி வருவதாகத் தெரிவித்தது.