அமெரிக்காவால் சூறையாடப்பட்டு மீண்டும் பிலிப்பீன்ஸ் வந்து சேர்ந்துள்ள தேவாலய மணிகள்
அமெரிக்காவால் நூறாண்டுகளுக்கு முன்னர் பிலிப்பீன்ஸிலிருந்து சூறையாடப்பட்ட தேவாலய மணிகள், மீண்டும் அவற்றின் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளன.
அமெரிக்காவால் நூறாண்டுகளுக்கு முன்னர் பிலிப்பீன்ஸிலிருந்து சூறையாடப்பட்ட தேவாலய மணிகள், மீண்டும் அவற்றின் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளன.
வெண்கலத்தாலான அந்த மூன்று தேவாலய மணிகள், பலன்ஹிகா (Balangiga) நகரத்திற்கு திருப்பி அனுப்பப்பட்டன.
பிலிப்பீன்ஸ் மக்கள் ஆனந்தக் கண்ணீருடன் மணிகளை வரவேற்றனர்.
1901ஆம் ஆண்டில் பலன்ஹிகா நகரத்தின்மீது திடீர்த் தாக்குதலை நடத்திய அமெரிக்கர்கள், பல்லாயிரம் பிலிப்பீன்ஸ் மக்களைக் கொன்றதோடு நகரத்தையும் அழித்ததாகக் கூறப்படுகிறது.
சுதந்திரத்தின் சின்னங்களான அந்த மணிகள், பல ஆண்டுகளுக்குப் பின் பிலிப்பீன்ஸ் மண்ணில் மீண்டும் இன்று ஒலித்தன.