'COVID-19 கிருமித்தொற்று: 'குணமடைந்தோரின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புசக்தியைக் கொண்டு கிருமியைக் கொல்ல முடியும்'
'COVID-19 கிருமித்தொற்று: 'குணமடைந்தோரின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புசக்தியைக் கொண்டு கிருமியைக் கொல்ல முடியும்'
சீன ஆய்வாளர்கள் COVID-19 கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தோரின் ரத்தத்தில் இருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தியைக் கொண்டு அந்தக் கிருமியைக் கொல்ல முடியும் என்று கூறுகின்றனர்.
South China Morning Post நாளேடு அந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள Plasma எனும் நிறமற்ற திரவத்தைக் கொண்டு சீன தேசிய உயிரியல் தொழில்நுட்பக் குழுமம் ஆய்வு நடத்தியது.
நோய் எதிர்ப்புச் சக்திக்கான பொருள்கள் கிருமியைக் கொல்லும் என்பது அந்த ஆய்வில் தெரியவந்தது.
கிருமித்தொற்றால் கவலைக்கிடமான நிலையில் இருந்த 11 நோயாளிகளுக்கு அதனைக்கொண்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
12 முதல் 24 மணி நேரத்தில் நோயாளிகளின் வீக்கம் குறிப்பிடத்தக்க அளவு குறைந்ததாகக் கூறப்பட்டது.