ராயல் புருணை விமானத்தில் மின்கலன் வெடித்தது
ராயல் புருணை ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.
ராயல் புருணை ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ச்சி.
நடுவானில் ஒரு பயணியின் கையடக்க மின்கலன் வெடித்தது. விமானம் முழுவதும் புகை மண்டியது. எவருக்கும் காயமில்லை. குறித்த நேரத்தில் புருணை தலைநகர் பண்டார் ஸ்ரீபகவானில் விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது.
தங்கள் பெட்டிகளில் உள்ள ஆபத்தான பொருட்கள் தொடர்பான விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பயணிகளுக்கு ராயல் புருணை ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.