Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

மலேசியா: ஜொகூர் பாரு கடையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 2 பேர் மரணம்

ஜொகூர் பாருவின் தாமான் புக்கிட் இந்தா பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கடையொன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 2 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசிப்புநேரம் -
மலேசியா: ஜொகூர் பாரு கடையில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 2 பேர் மரணம்

படம்: Bernama

(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)

ஜொகூர் பாருவின் தாமான் புக்கிட் இந்தா பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கடையொன்றில் ஏற்பட்ட தீச்சம்பவத்தில் 2 பேர் மாண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தின் தொடர்பில் தீயணைப்புப் பிரிவுக்கு அதிகாலை 4: 30 மணியளவில் தகவல் கிடைத்ததாக மீட்புப்பணி அதிகாரிகள் கூறினர்.

தீச்சம்பவத்தில் 20, 70 வயது மதிக்கத்தக்க இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

கட்டடத்தில் இருந்த மற்ற மூன்று பேரில் இருவருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் மற்றொருவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

தீயை அணைக்க 28 தீயணைப்பு அதிகாரிகள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் 6 இயந்திரங்களைப் பயன்படுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணை தொடர்கிறது.


விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்