Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய ஆடவர்

மனைவிக்காகப் பல வகையில் தியாகம் செய்யும் கணவர்கள் உள்ளனர்....

வாசிப்புநேரம் -
கர்ப்பிணி மனைவிக்காக நாற்காலியாக மாறிய ஆடவர்

(படம்:Pixabay)

மனைவிக்காகப் பல வகையில் தியாகம் செய்யும் கணவர்கள் உள்ளனர்....

ஆனால், மனைவிக்கு நாற்காலியாகக் கூட மாறியுள்ளார் ஆடவர் ஒருவர்.

சீனாவின் சீச்சுவான் (Sichuan) பகுதியில் நடந்த அந்தச் சம்பவத்தைப் படம் எடுத்த ஒருவர் இணையத்தில் பகிர, அது பலரையும் கவர்ந்துள்ளது.

கர்ப்பகாலப் பரிசோதனைகளுக்காக கணவரும் மனைவியும் மருத்துவமனைக்குச் சென்றிருந்தனர்.

அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், மருத்துவரைக் காண அதிக நேரம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அருகில் இருந்த இருக்கைகளில் மற்றவர்கள் அமர்ந்திருந்ததால், மனைவி அதிக நேரம் நிற்க நேரிட்டது.

மற்றவர்கள் கர்ப்பிணிக்கு இருக்கையை விட்டுக்கொடுக்க முன் வரவில்லை என்று South China Morning Post செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

கால்கள் மரத்துப் போன மனைவி, கணவரிடம் அதைக் கூறினார்.

மனைவியின் சிரமத்தை அறிந்த கணவர், தம்மையே நாற்காலியாக மாற்றித் தரையில் உட்கார்ந்து தமது முதுகின்மேல் மனைவியை அமர்ந்து ஓய்வெடுக்கச் செய்தார்.

மருத்துவரைக் காணும் வரை, மனைவியைத் தமது முதுகின் மீது அமர வைத்தார் அன்புக் கணவர்.

இதுவல்லவோ "அமரக்" காதல் என்று அசந்து போயினர் அதைக் கண்ட இணையவாசிகள்! 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்