பெய்ரூட் வெடிப்பு: அரசாங்கத்துக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டம்
பெய்ரூட் நகரில் அரசாங்கத்துக்கு எதிராகப் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
பெய்ரூட் நகரில் அரசாங்கத்துக்கு எதிராகப் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த வெடிப்புச் சம்பவத்தால் சினமடைந்துள்ள மக்கள் அதில் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்த பேரணி ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
அதில் ஆயிரக்கணக்கானோர் பங்குபெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மோசமாகச் சேதமடைந்த பகுதிகளில் தொடங்கி தியாகிகள் சதுக்கம் வரை நடந்து செல்ல அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பலரைக் காணவில்லை.