Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

இலங்கையின் பிரதமராக மீண்டும் பொறுபேற்ற ரணில் விக்ரமசிங்க

இலங்கையில் திரு. ரணில் விக்ரமசிங்க இன்று (டிசம்பர் 16) மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

வாசிப்புநேரம் -
இலங்கையின் பிரதமராக மீண்டும் பொறுபேற்ற ரணில் விக்ரமசிங்க

(படம்: AFP/LAKRUWAN WANNIARACHCHI)

இலங்கையில் திரு. ரணில் விக்ரமசிங்க இன்று (டிசம்பர் 16) மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார்.

சுமார் இரண்டு மாதம் நீடித்த அரசியல் நெருக்கடி அதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.

அக்டோபர் மாதம், அதிபர் மைதிரிபால சிரிசேனா
திடீரென திரு. விக்ரமசிங்கயைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு திரு. மஹிந்த ராஜபக்சேயை அந்தப் பொறுப்புக்கு நியமித்தார்.

225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் இரண்டு முறை நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. ராஜபக்சே தோல்வியடைந்தார். என்றாலும் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக அவர் மறுத்து வந்தார்.

இதற்கிடையே, நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் திரு. விக்ரமசிங்க வெற்றிபெற்றார்.

அதைத் தொடர்ந்து நேற்று திரு. ராஜபக்ச பிரதமர் பதவியைத் துறந்தார்.

பொதுத் தேர்தல் நடத்தப்படாமல், பிரதமர் பொறுப்பில் நீடிக்கத் தாம் விரும்பவில்லை என்று அவர் கூறினார். 

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்