மியன்மாரில் பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர்
மியன்மாரின் ரக்கைன் மாநிலத்துக்கு பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் சென்று பார்வையிட்டுள்ளார்.
மியன்மாரின் ரக்கைன் மாநிலத்துக்கு பங்களாதேஷ் வெளியுறவு அமைச்சர் சென்று பார்வையிட்டுள்ளார்.
மியன்மாரில் நடந்த வன்முறையால், பங்களாதேஷுக்குத் தப்பிச் சென்ற ரொஹிஞ்சா அகதிகள், மீண்டும் மியன்மார் திரும்ப, அவர்களுக்கு மியன்மாரில் செய்யப்படும் வசதிகளை அவர் பார்வையிட்டார்.
அகதிகளை மீண்டும் மியன்மாருக்கு அனுப்பி வைப்பது அவரது பயணத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.
ரக்கைன் மாநிலத்தில் கிளர்ச்சியாளர்களைத் துடைத்தொழிக்க நடத்தப்பட்ட வன்முறையால் பாதிக்கப்பட்ட, சுமார் 700 ஆயிரம் ரொஹிஞ்சா அகதிகள், பங்களாதேஷில் தஞ்சம் புகுந்துள்ளனர்.