மலேசியா: சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தொடங்கியுள்ளது
மலேசியாவின் சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
மலேசியாவின் சபா மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
அங்குள்ள 73 தொகுதிகளில் பலமுனைப் போட்டி நிலவுகிறது.
பிரசாரம் 2 வாரம் நீடிக்கும். வரும் 26 ஆம் தேதி வாக்களிப்பு இடம்பெறும்.
சபா மாநிலத்தில் புதிய கிருமித்தொற்று இடம் அடையாளம் காணப்பட்டுள்ளதால், பிரசாரம் எப்படி அமையும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கூட்டணிக்குள் ஒற்றுமையை வலுப்படுத்துவது பிரதமர் முஹிதீன் யாசினுக்குப் (Muhyiddin Yassin) பெரும் சவாலாய் உள்ளது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள கூட்டணியில் உள்ளவர்கள் சில தொகுதிகளில் நேருக்கு நேராய்ப் போட்டிக் களத்தில் இறங்கியுள்ளனர்.
சபா மாநில சட்டமன்றத் தேர்தல், மலேசியாவின் அடுத்த பொதுத்தேர்தலுக்கு வழியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.