Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

ஆசியா

நிர்வாணமாக சென்ற ஆடவர்- மலேசியாவில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை

மலேசியாவின் சபா மாநிலத்தில் பொது நீரூற்று ஒன்றில் இருவர் கட்டி அணைத்துக்கொண்டு குளித்த படம் வெளியான சில நாட்களில் புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

வாசிப்புநேரம் -
நிர்வாணமாக சென்ற ஆடவர்- மலேசியாவில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை

(படம்:REUTERS/Dado Ruvic)

அதே மாநிலத்தில் உள்ள பெனம்பாங் (Penampang) நகரில் ஆடவர் ஒருவர் ஆடைகளே இல்லாமல் சாலையில் நிர்வாணமாக நடந்து போகும் படம் இணையத்தில் பரவி வருகிறது.

வெறும் தொப்பி, செருப்பு ஆகியவற்றை மட்டுமே அந்த ஆடவர் அணிந்திருக்கிறார்.

நிழற்படம், நேற்று WhatsApp தளத்தில் பரவத் தொடங்கியது. அதில் இடம்பெற்றுள்ள ஆடவரின் அடையாளமோ அவர் எங்கிருந்து வந்திருக்கிறார் என்பதோ இன்னும் தெரியவில்லை.

அது பற்றிய அதிகாரத்துவக் காவல்துறை அறிக்கைகளும் இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

உள்ளூர்வாசிகளோ சுற்றுப்பயணிகளோ அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டால், உடனே அதிகாரிகளிடம் புகார் செய்யவேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்