சீனாவில் கைபேசித் தயாரிப்பை நிறுத்துகிறது Samsung நிறுவனம்
உலகின் ஆகப்பெரிய திறன்பேசிச் சந்தையைக் கொண்டுள்ள Samsung நிறுவனம் சீனாவில் தனது கைபேசித் தயாரிப்பை நிறுத்திக்கொண்டுள்ளது.
(வாசிப்பு நேரம்: 1 நிமிடத்திற்குள்)
உலகின் ஆகப்பெரிய திறன்பேசிச் சந்தையைக் கொண்டுள்ள Samsung நிறுவனம் சீனாவில் தனது கைபேசித் தயாரிப்பை நிறுத்திக்கொண்டுள்ளது. உள்ளூர் நிறுவங்களின் கடும் போட்டி அதற்குக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூன் மாதம் Samsung நிறுவனம் சீனாவில் உள்ள அதன் கடைசி உற்பத்தி ஆலையை மூடியது.
Samsung நிறுவனம் போல மற்ற நிறுவனங்களும் அவற்றின் தயாரிப்புகளை சீனாவிலிருந்து மற்ற நாடுகளுக்கு மாற்றி வருகின்றன. மந்தமான பொருளியல் சூழலும் அதிகரித்துவரும் ஊழியர் செலவும் அதற்குக் காரணங்கள்.